சென்னையில் தமிழக அரசு உதவியுடன் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதனை ICFA ( International Cine Appreciation Forum) ஏற்பாடு செய்துள்ளது.
10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 36 நாடுகளைச் சேர்ந்த 120 படங்கள் பங்கேற்கின்றன.
சென்னையில் உள்ள பிலிம் சேம்பர், உட்லண்ட்ஸ், சிம்பொனி ஆகிய திரையரங்குகளில் தினசரி 4 முதல் 5 காட்சிகளாக இந்தப் படங்கள் காட்டப்படுகின்றன.
இதில் மகிழ்ச்சியான விஷயம் இந்த திரைப்பட விழா நடக்க தமிழக அரசு உதவி செய்துள்ளது. அதற்காக முதல்வர் கலைஞருக்கு நன்றி.
டிசம்பர் 17-ம் தேதி மாலை 6 மணிக்கு கலைவாணர் அரங்கில் இந்த விழா தொடங்குகிறது.உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் செய்தி விளம்பரத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர்.
உலக திரைப்பட வரலாற்றில் தனி முத்திரை பதித்த ஜப்பானிய இயக்குநர்Keisuke Kinoshita விற்கும் நமது இயக்குநர் மேதை C.V. ஸ்ரீதர் அவர்களுக்கும் சிறப்பு அஞ்சலியுடன் திரைப்பட விழா துவங்குகிறது.
சிறப்புகள்:
போலந்திலிருந்து 5 திரைப்ப்டங்கள் திரையிடப்படும்.
பிரேசில், சீனா, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மன், ஹங்கேரி, இஸ்ரேல், இத்தாலி,ஜ்ப்பான், மலேசியா மற்றும் பல நாட்டு மிகச்சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
இந்தியன் பனோரமாவில் நமது மொழி படங்களான தமிழ், மராத்தி, மலையாளம், கன்னடம், அஸ்ஸாமி படங்களும் திரையிடப்படும்.
தமிழில் சுப்பிரமணியபுரம், அஞ்சாதே, பூ மற்றும் காஞ்சிபுரம் ஆகிய படங்கள் இந்த விழாவில் பங்கேற்கும் என தெரிகிறது.
தரமான உலக சினிமா ரசிகர்களுக்கு இது செம விருந்துதான்..
நான் நுழைவு சீட்டு வாங்கி விட்டேன்..
சென்னை வாசிகளே " Don't Miss It"
3 comments:
நல்ல விஷயம் தான். தகவலுக்கு நன்றி..
Thank u butterfly surya for ur information.
Thanx Dr.
Post a Comment